ஜனனியின் கனவு நினைவேறியது!

Posted by Unknown on Sunday, 16 February 2014

அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான நடிகை ஜனனியின் கனவு நிறைவேறியிருப்பதாகக் கூறியுள்ளார்.

கம்ப்யூட்டர் எஞ்சினியரான நடிகை ஜனனி இயக்குனர் பாலாவின் அவன் இவன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு பாகன் திரைப்படத்தில் ஸ்ரீகாந்துடன் இணைந்து நடித்திருந்தார்.

தற்பொழுது அஷோக் செல்வனுடன் தெகிடி படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் ஐடி துறையில் வேலை செய்யும் பெண்ணின் வேடத்தில் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியிருப்பதாகக் கூறியுள்ளார். தான் நடிக்கவராவிட்டால் ஐடி துறைக்குத்தான் சென்றிருப்பேன் என்றும்,
இப்படத்தின் மூலம் தனது கனவினை அடைந்ததாகவும் கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் பி.ரமேஷ் இயக்கிவரும் திரைப்படம் தெகிடி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில்
வெளியாகின. விரைவில் இப்படம் திரைக்குவரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment