அஞ்சான் சமந்தாவின் அழகை கண்டு மிரண்டு போன சக நடிகைகள்!

Posted by Unknown on Wednesday, 19 February 2014

ஆந்திர சினிமாவில் பெரிய பெரிய கவர்ச்சி வெடிகுண்டுகளெல்லாம் வெடித்து சிதறிக்கொண்டிருந்தபோதும், அவர்கள் அத்தனை பேரையும் காலி பண்ணி விட்டு மார்க்கெட்டில் தில்லாக நின்று கொண்டிருக்கிறார் சமந்தா. அதோடு, ஆரம்பத்தில் மயிலிறகாய் மனதை வருடியவர், நாளடைவில் கவர்ச்சி புயல்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, தானும் வரிந்து கட்டிக்கொண்டு தொடை தட்டி எதிரிகளை முறியடித்தார்.
இதனால் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாகவே தொடர்ந்து வலம் வந்து கொண்டிருப்பவர், இப்போது விஜய், சூர்யாவின் புதிய படங்கள் மூலம் கோலிவுட்டிலும் அதிரடியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதோடு, தமிழிலும் டாப் நடிகையாகவே இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, இந்த படங்களில் ரசிகர்களை அதிரடியாக அட்டாக் பண்ணும் வகையில் கவர்ச்சி கோதாவிலும் குதித்திருக்கிறார் சமந்தா.
மேலும், சமந்தாவுக்கு தோல் நோய். அதனால் அவரது அழகு மங்கிப்போய் விட்டது என்று சிலர் சினிமா வட்டாரங்களில் அவரைப்பற்றி தவறான கருத்து பரப்பி வருவதால், தனது அழகை பளிச்சிட வைக்கும் வகையில், மேக்கப் மற்றும் காஸ்டியூம்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. மேலும், பவர்புல்லான கேமரா லைட்டுகளுக்கு முன்பு நடிக்கும்போதுதான் தனது தோலில் அலர்ஜி ஏற்படுகிறது என்பதால், எந்த லைட்களையும் தாங்கிக்கொள்ளும் வகையில், தற்போது சில க்ரீம்களை உடம்பில் பூசிக்கொண்டு தனது கவர்ச்சியை அழகாக காண்பித்து வருகிறாராம் சமந்தா.samanthaa1

இதனால் ஆரம்பத்தில் சமந்தாவுக்கு அஞ்சான் படத்தில் நடித்தபோது மீண்டும் தோல் அலர்ஜி ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தியைக்கேட்டு சந்தோசத்தைக்கொண்டாடி வந்த சில கோலிவுட் கதாநாயகிகள், இப்போது சமந்தா அழகு புயலாக உருவெடுத்து நிற்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

{ 0 comments... read them below or add one }

Post a Comment